'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வழி வந்தவர்கள்தான் நாம். நாம் எல்லோருமே நமது உடல் குறித்த கவனம் இல்லாமல் வாழவே உலகவணிகமயமாக்கல் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் , நமக்கே தெரியாமல் இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம்.