முதல் பகுதி போல இரண்டாம் பகுதியும் அருமை. முதல் 3 அத்தியாயங்கள் விருவிருப்பாக செல்கின்றன. மற்றவை மெதுவாக நகர்ந்தாலும் ஆர்வம் குறையவில்லை. உலகின் மிக முக்கியமான நாவலை, மிக கவனமாக, நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வாசித்தவர்கள், இந்தத் தொடரில் இருக்கும் குறைகள் மற்றும் போதாமைகளை தெரிவிக்கலாம்.