சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கைய

ராதேக்ருஷ்ணா இலங்கை . . . பூமிப்பந்தின் அழகான தீவு . . . இயற்கை அன்னையின் அற்புதத்தீவு . . . குபேரனின் பட்டிணம் . . . அரக்கர் குல சிகாமணி விபீஷண ஆழ்வாரைத் தந்த ஒரு புண்ணியத் தீவு. . . சீதா பிராட்டியும் தவமிருந்து பதிவிரதையின் பலத்தை நிரூபணம் செய்த தீவு . . . வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும், "ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து சீதையைத் தேடிப் பறந்த தீவு . . . சிறிய திருவடி ஆஞ்சநேயரும் அழகிலும்,ஐஸ்வர்யத்திலும், அசந்துபோன தீவு . . . ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து, அவளை சமாதானப்படுத்தி, ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . . ராமனின் கை மோதிரத்தைக் கண்டு, உகந்து,சீதையும் ராமனுக்கு தன் சூடாமணியை தந்த தீவு . . . சக்ரவர்த்தி திருமகன் ராமனும், தன்னுடைய திருவடியைப் பதித்த உயர்ந்த தீவு . . . கடலரசனின் மடியில் தனக்கும்,பாரதத்திற்கும் சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம் உறுதி செய்யும் தீவு . . . எங்கள் ஸ்ரீரங்கராஜனும், எப்பொழுதும் தன் திருக்கண்களால் கடாக்ஷிக்கும் தீவு . . . கருணையின் உறைவிடம் சீதா பிராட்டி அரக்கிகளுக்கு அபயம் அளித்த தீவு . . . எங்கள் சீதா மாதாவை பத்திரமாகப் பாதுகாத்த உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . . வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும், தங்கள் வாக்கியங்களில் கொண்டாடி மகிழ்ந்த தீவு . . . ஆஞ்சநேயரும்,விபீஷணரும், பகவான் ராமனைப் பற்றி அளவளாவிய தீவு . . . ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான சுந்தரகாண்டத்தை தன்னுள் வைத்திருக்கும் தீவு . . . ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும் தைரியமும் நிரூபணம் ஆன பக்தித் தீவு . . . ஆஞ்சநேயரும் தன்னை சுயசோதனை செய்துகொண்டு, தன் மனதை உணர்ந்த தீவு . . . பதிவிரதை மண்டோதரியும், பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக வாழ்ந்த பெருமை மிகு தீவு . . . அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து, ராவணனின் அஹம்பாவத்தை வதம் செய்த அற்புதத் தீவு . . . சீதையை ராமன் அக்னிப்ரவேசம் செய்யச் சொல்ல அவளின் கற்பை நிரூபணம் செய்த தீவு . . . அழகன் ராமனும்,அழகி சீதையும், புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு புறப்பட்ட தீவு . . . இன்றும் ராமாயணத்தின் அடையாளத்தை மறக்காத, அழிக்காத,மறைக்காதத் தீவு . . . எங்கள் பாரதியும், "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று புலம்பிய தீவு . . . இத்தனை பெருமை உடைய தீவு . . . இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . . ஹே விபீஷணா ! அங்கே அமைதி திரும்ப நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . . ஹே ஆஞ்சநேயா ! இலங்கையில் நிம்மதி உண்டாக உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . . ஹே சீதா மாதா ! ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும் ஒற்றுமையாய் வாழ வரம் தா . . . ஹே ராமா ! இலங்கை உன் சன்னிதானத்தில் ஆனந்தமாய் வாழ அருள் செய் . . . இலங்கை மாதா ! நீ நன்றாக இருக்கவேண்டும் ! பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !பாரதவாசிகளுக்குஇலங்கைமாதாவே நீ சித்தி . . .இலங்கைவாசிகளுக்குபாரதமாதாவே நீ பெரியம்மா . . . பாரதமாதா எப்பொழுதும்முத்தமிட்டுக்கொண்டிருக்கும்இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . . பாரதமும்,இலங்கையும் பாரதமாதா எப்பொழுதும், உன் உச்சி முகந்து, உன்னை அன்போடு ரசித்துக்கொண்டிருக்கிறாள் ! நீயும்,பாரதமாதாவும் கை கோர்த்து உலகையே வசம் செய்யும் அந்த நாள் சீக்கிரத்தில் வர வேண்டும் . . . வரும். . . தமிழரும்,சிங்களரும் ஒன்றாய் வாழும் பொன்னாள் சீக்கிரத்தில் வந்தே தீரும் . . . அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம் . . . நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .

Replies 1 to 2 of 2 Descending
Hemal Shah
Hemal Shah
from Mumbai
13 years ago

Can you post this topic in English?

Also, on the forum we dont discuss things other than Blogging and if found, we consider it spam.

Naveen
from Bengaluru
13 years ago

B'twn how do u know, this is not related to blogging!? Surprised

Mag[m]
Mag[m]
from Delhi
13 years ago

@addy and anoop...... can i say this as a spam with ur permissionInnocent what indi-police should do now ??


LockSign in to reply to this thread