சகோதரிகள் . . .பாரதமும்,இலங்கைய
ராதேக்ருஷ்ணா இலங்கை . . . பூமிப்பந்தின் அழகான தீவு . . . இயற்கை அன்னையின் அற்புதத்தீவு . . . குபேரனின் பட்டிணம் . . . அரக்கர் குல சிகாமணி விபீஷண ஆழ்வாரைத் தந்த ஒரு புண்ணியத் தீவு. . . சீதா பிராட்டியும் தவமிருந்து பதிவிரதையின் பலத்தை நிரூபணம் செய்த தீவு . . . வீர தீர ஆஞ்சநேய ஸ்வாமியும், "ஜய் ஸ்ரீ ராம்" என்று பாரதத்திலிருந்து சீதையைத் தேடிப் பறந்த தீவு . . . சிறிய திருவடி ஆஞ்சநேயரும் அழகிலும்,ஐஸ்வர்யத்திலும், அசந்துபோன தீவு . . . ஆஞ்சநேயர் சீதையைக் கண்டுபிடித்து, அவளை சமாதானப்படுத்தி, ராமனின் மோதிரத்தைத் தந்த தீவு . . . ராமனின் கை மோதிரத்தைக் கண்டு, உகந்து,சீதையும் ராமனுக்கு தன் சூடாமணியை தந்த தீவு . . . சக்ரவர்த்தி திருமகன் ராமனும், தன்னுடைய திருவடியைப் பதித்த உயர்ந்த தீவு . . . கடலரசனின் மடியில் தனக்கும்,பாரதத்திற்கும் சம்மந்தத்தை ராமர் பாலம் மூலம் உறுதி செய்யும் தீவு . . . எங்கள் ஸ்ரீரங்கராஜனும், எப்பொழுதும் தன் திருக்கண்களால் கடாக்ஷிக்கும் தீவு . . . கருணையின் உறைவிடம் சீதா பிராட்டி அரக்கிகளுக்கு அபயம் அளித்த தீவு . . . எங்கள் சீதா மாதாவை பத்திரமாகப் பாதுகாத்த உத்தமி த்ரிஜடையைத் தந்த தீவு . . . வால்மீகியும்,கம்பனும்,துளசிதாசரும், தங்கள் வாக்கியங்களில் கொண்டாடி மகிழ்ந்த தீவு . . . ஆஞ்சநேயரும்,விபீஷணரும், பகவான் ராமனைப் பற்றி அளவளாவிய தீவு . . . ஸ்ரீமத் ராமாயணத்தின் அழகான சுந்தரகாண்டத்தை தன்னுள் வைத்திருக்கும் தீவு . . . ஆஞ்சநேயரின் பலமும்,பக்தியும் தைரியமும் நிரூபணம் ஆன பக்தித் தீவு . . . ஆஞ்சநேயரும் தன்னை சுயசோதனை செய்துகொண்டு, தன் மனதை உணர்ந்த தீவு . . . பதிவிரதை மண்டோதரியும், பொல்லா அரக்கன் ராவண பத்தினியாக வாழ்ந்த பெருமை மிகு தீவு . . . அழகன் ராமனும் ப்ரவேசம் செய்து, ராவணனின் அஹம்பாவத்தை வதம் செய்த அற்புதத் தீவு . . . சீதையை ராமன் அக்னிப்ரவேசம் செய்யச் சொல்ல அவளின் கற்பை நிரூபணம் செய்த தீவு . . . அழகன் ராமனும்,அழகி சீதையும், புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு புறப்பட்ட தீவு . . . இன்றும் ராமாயணத்தின் அடையாளத்தை மறக்காத, அழிக்காத,மறைக்காதத் தீவு . . . எங்கள் பாரதியும், "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று புலம்பிய தீவு . . . இத்தனை பெருமை உடைய தீவு . . . இலங்கை . . .ஸ்ரீ லங்கா . . . ஹே விபீஷணா ! அங்கே அமைதி திரும்ப நீர் வந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் . . . ஹே ஆஞ்சநேயா ! இலங்கையில் நிம்மதி உண்டாக உமது திருவடியை மீண்டும் அங்கே வையும் . . . ஹே சீதா மாதா ! ஸ்ரீ லங்காவில் தமிழரும்,சிங்களரும் ஒற்றுமையாய் வாழ வரம் தா . . . ஹே ராமா ! இலங்கை உன் சன்னிதானத்தில் ஆனந்தமாய் வாழ அருள் செய் . . . இலங்கை மாதா ! நீ நன்றாக இருக்கவேண்டும் ! பாரத மாதாவும் நீயும் சகோதரிகள் !பாரதவாசிகளுக்குஇலங்கைமாதாவே நீ சித்தி . . .இலங்கைவாசிகளுக்குபாரதமாதாவே நீ பெரியம்மா . . . பாரதமாதா எப்பொழுதும்முத்தமிட்டுக்கொண்டிருக்கும்இளைய சகோதரி இலங்கையே நீ வாழ்க . . . பாரதமும்,இலங்கையும் பாரதமாதா எப்பொழுதும், உன் உச்சி முகந்து, உன்னை அன்போடு ரசித்துக்கொண்டிருக்கிறாள் ! நீயும்,பாரதமாதாவும் கை கோர்த்து உலகையே வசம் செய்யும் அந்த நாள் சீக்கிரத்தில் வர வேண்டும் . . . வரும். . . தமிழரும்,சிங்களரும் ஒன்றாய் வாழும் பொன்னாள் சீக்கிரத்தில் வந்தே தீரும் . . . அதற்கு அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம் . . . நிச்சயம் நம் ப்ரார்த்தனை வெல்லும் . . .
Can you post this topic in English?
Also, on the forum we dont discuss things other than Blogging and if found, we consider it spam.
@addy and anoop...... can i say this as a spam with ur permission what indi-police should do now ??
Sign in to reply to this thread