கீர்த்தனா என்னும் ஆந்திர மிள

paavib
paavib
from USA
12 years ago

பெங்களூர் -  fridge ல்  வைத்த ஆப்பிள் போல  எப்பொழுதும் பெண்கள் புதுசாக இருக்கும் ஊர் . அதுவும்  ஜோதி நிவாஸ் காலேஜ்  அருகில் சென்று விட்டால் கால நேரம் தெரியாமல்  பார்த்துக்கொண்டே  இருக்கலாம் . இனி காலேஜ் பக்கம் போனால்  ப்ரொஜெக்டில் இருந்து நீக்கி விடுவேன் என்று அன்பு கட்டளை மேலதிகாரியிடம் இருந்து  வந்த காரணத்தினால்  வாழ்கை வறட்சியாக போய்கொண்டிருந்த கால கட்டம் .  அப்பொழுது ஜோதி நிவாசில் உள்ள அத்தனை அழகான பெண்களும் ஒரு  உருவில் வந்தார்கள் புதிதாக சேர்ந்த பெண்ணின் வடிவில் . பெயர் கீர்த்தனா , பேரை சொல்லும் போதே ஒரு இசை கேட்கிறது அல்லவா? எனக்கு ஒரு  இசை கச்சேரியே கேட்டது .   ஆந்திரா, உலகுக்கு தந்த தேவதை . ஆந்திரா பருப்பு சாதத்துக்கும் , கோங்கிறா சட்டினிக்கும் , பெண்களின் அழகுக்கும் எதோ சம்மந்தம் இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை என்னை கண்டுபிடிக்கச் செய்து , என்னையும் ஒரு  விஞ்ஞானி ஆக்கினாள்.என் மேனேஜர் வாழ்கையில் செய்த ஒரே நல்ல காரியம் , அவளுக்கு பயிற்சி கொடுக்கும் படி என்னைப்  பணித்தது . விளைவு ,எனக்கு அரைகுறையாக தெரிந்த வேலையும் சேர்த்து மறந்து போனது . வானத்தில் உள்ள தேவதைகள் எல்லாம் கூட்டு  முயற்சியாக என்னை சபித்த பொன்னாளில்  கீழ்க்கண்டவை நடந்தது  கீர்த் , கீஈர்த் , கீஏஏஏஏஎர்த்  கோபமாய் திரும்பி பார்த்தாள் , "வாட் யு வான்ட் ?  "  அது தமிழ் அவள் அரைகுறையாக கற்றுகொண்டிருந்த சமயம்,   புரியாது என்ற தைரியத்தில்  "நீதான் வேண்டுமென்றேன் ".  சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது  "வென்  யு வான்ட் ? "அருகில் இருந்த தமிழ் தெரிந்த என் சக பணியாளர்கள் , உற்சாக கூச்சலில் கைதட்டி  ,நடந்ததை  படம் வரைந்து பாகம் குறித்து  அவளுக்கு  விளக்க ஆரம்பித்தார்கள் .தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நேரம்  இருக்கும் கைதியின் மனநிலையில்  நான் பரிதாபமாக   நின்று கொண்டிருந்தேன் . கோபமும் , வெட்கமும் , போட்டிபோட அவர்கள் சொன்னதை  கவனித்தவள் , குறுநகையுடன்  அருகே வந்து காதோரம் கிசுகிசுப்பாய்  கேட்டாள் "வென்  யு வான்ட் ? " மெலிதாய் தொடங்கிய கீர்த்தனா என்னும் இசை உடல் , மனம்  முழுவதும் வியாபித்து பரவ ஆரம்பித்தது . ஆந்திராவின் நிலப்பகுதியும் , மகேஷ் பாபுவும் , இலியானாவும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனார்கள் .  தெலுங்கனா பிரச்சனைக்காக சோறு தண்ணி இல்லாமல்  கவலைப்பட ஆரம்பித்தேன் .  தமிழ் பேசும் போது கூட அநியாயமாக  ஒவ்வொரு வார்த்தையின்  முடிவிலும்  ஒரு "லு " சேர்த்துக்கொண்டேன் .கவிதை போலத்தான் வாழ்கை போய்க்கொண்டிருந்தது யாரும் அற்ற தனிமையில் , மிகவும் அந்தரங்கமான நிலையில்  காதலுடன் , நான் கீர்த்  என்று அழைக்கையில்  என்ன  "ஜனா"  என்று அவள்  கேட்கும் வரை .பின் குறிப்பு : "ஜனா என் பெயர் அல்ல "                                                                                     - பாவி

                                                                                   http://paavib.blogspot.com

                                                                                     

Edited 12 years ago
Reason: title change
LockSign in to reply to this thread